×

பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு

பொன்னமராவதி,ஏப்.15: பொன்னமராவதியில் காவல்துறை, தீயணைப்பு துறை, பேரூராட்சி துறை மற்றும் அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் இணைந்து பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாட்டில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அவ்வகையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் எஸ்பி பாலாஜிசரவணன் அறிவுறுத்தலின்படி பொன்னமராவதி டிஎஸ்பி செங்கமலகண்ணன் ஆலோசனையின்படி பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியும் பல்வேறு இடங்களில் முககவசமின்றி வரும் பொது மக்களுக்கு 300 முககவசமும் வழங்கினர். இன்ஸ்பெக்டர் தனபாலன், எஸ்ஐ வீரமணி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் நிலைய அலுவலர் சந்தானம் ஆகியோர் ஒன்றிணைந்து பேருந்து பயணிகள், வியாபாரிகளுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : Corona ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...