×

ஒருவர் உயிரிழப்பு 13,394 பேருக்கு கொரோனா தடுப்பூசி

காரைக்கால், ஏப்.15: காரைக்காலில் முதல் தவணையாக சுகாதாரப் பணியாளர்கள் 1,474 பேருக்கும், முன்களப் பணியாளர்கள் 1,658 பேருக்கும் 60 வயதுக்கும் மேற்பட்டோர் 4,667பேருக்கும் 45 வயது முதல் 59 வயது வரை இணை நோய்கள் உடையவர்கள் 4,830 பேருக்கும் என 12,629 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாம் தவணையாக சுகாதாரப் பணியாளர்கள் 490 பேருக்கும், முன்களப் பணியாளர்கள் 180 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

60 வயதுக்கும் மேற்பட்ட 57 பேருக்கும் 45 வயது முதல் 59 வயது வரை இணை நோய்கள் உள்ளவர்கள் 38 பேருக்கும் என 765 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் தவணையாக மொத்தம் 13,394 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...