×

வத்திராயிருப்பு காவல்நிலையத்தில் முகாம் 228 பேருக்கு கொரோனா தடுப்பூசி

வத்திராயிருப்பு ஏப். 15: வத்திராயிருப்பு காவல்நிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 228 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. வத்திராயிருப்பு பகுதியில் கொராரோனா தொற்று பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. இதையடுத்து வத்திராயிருப்பு காவல் நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுபக்குமார் தலைமை வகித்தார். எஸ்ஐக்கள் நாகராஜ், கருணாகரன், சுப்புராஜ் முன்னிலை வகித்தனர். முகாமை திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்கள்,  போலீசார் உட்பட 228 பேருக்கு கொராரோனா தடுப்பூசி குன்னூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயராமன் தலைமையில் போடப்பட்டது.

Tags : Vatri police station ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ