×

பண்ணைப்புரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

தேவாரம், ஏப்.15 பண்ணைப்புரத்தில் கொராேனா தடுப்பூசி முகாம் நடந்தது. பண்ணைப்புரம் பேரூராட்சி கரியணம்பட்டியில் தடுப்பூசி விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கியது. இதில் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. கோம்பை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கொரோனா தடுப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோம்பை, தேவாரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மருத்துவமனைகளில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு தடுப்பூசி எடுத்துக் கொள்வதன் அவசியம் குறித்து விளக்கி 126 பேருக்கு கரியணம்பட்டியில் தடுப்பூசி போடப்பட்டது.

Tags : Corona ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...