×

திமுக தண்ணீர் பந்தல் திறப்பு

காளையார்கோவில், ஏப்.15: மறவமங்கலத்தில் திமுக சார்பில் பொதுமக்களின் தாகத்தை போக்கும் விதமாக தண்ணீர் மற்றும் மோர் பந்தல் திறக்கப்பட்டது.மறவமங்கலம் பேருந்து நிலையம் அருகில் சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர் பெரியகருப்பன் அறிவுறுத்தலின்படி, தெற்கு ஒன்றிய செயலாளர் யோக கிருஷ்ணகுமார் தலைமையில் தண்ணீர், மோர் பந்தல் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி