×

ராமநாதபுரம் அருகே கம்பி திருடிய கான்டிராக்டர் கைது

ராமநாதபுரம், ஏப்.15: ராமநாதபுரம் அருகே அரியசாமி நகரைச் சேர்ந்தவர் ரில்வானா பேகம்(40). இவர் வீடு கட்ட வாசிம்கானிடம் ஒப்பந்தம் செய்தார். கட்டட பணியின் போது பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கட்டட பணிக்கு பேசிய தொகையை ரில்வானா பேகம் கொடுக்காததால், அவரின் கட்டடத்தில் இருந்து 90 கிலோ இரும்பு கம்பிகளை வாசிம்கான், திருடி சென்ற கூறப்படுகிறது. இது குறித்து கேணிக்கரை போலீசில் ரில்வானா பேகம் புகார் அளித்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசிம்கானை கைது செய்தனர்.

Tags : Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...