×

பர்கூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரி, ஏப்.15: பர்கூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளரும், எம்எல்ஏ.,வுமான ராஜேந்திரன் தலைமை வகித்து, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழங்களை வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், பேரூர் செயலாளர் துரைஸ் ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி செயலாளர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதே போல் ஒன்றியதில் 20 இடங்களில் தண்ணீர் பந்தலை எம்எல்ஏ., திறந்து வைத்தார்.

Tags : AIADMK ,Bargur ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...