×

திருவட்டாரில் தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட வேன், ைபக் மாயம்

குலசேகரம், ஏப்.15 :  திருவட்டாரில் பறிமுதல் செய்யப்பட்ட வேன், ைபக் மாயம் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டம் திருவட்டார்  அருகே கழுவன்திட்டை பகுதியை சேர்ந்த முருகன்  வட்ட வழங்கல்  அலுவலராக உள்ளார். தேர்தல் பணியின்போது பறக்கும்படை அதிகாரியாக  பணியாற்றினார். அப்போது நடந்த வாகன தணிக்கையின் போது எந்த ஆவணமும் இல்லாமல்  மண்ணெண்ணெய் கடத்தி வந்த வேன், ஆவணங்கள் இல்லாமல் இருந்த பைக் ஆகியவற்றை  பறிமுதல் செய்தார். அவற்றை திருவட்டார் தாலுகா அலுவலக  வளாகத்தில் நிறுத்தி இருந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை  முருகன் அலுவலகம் வந்து பார்க்கும்போது வேன் மற்றும் பைக்கை காணவில்லை. மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரி  முருகன் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவட்டார்  தாலுகா அலுவலகம் அருகே தான் காவலர் குடியிருப்பு உள்ளது. அதிலிருந்து 100  மீட்டர் தொலைவில் தான் காவல் நிலையமும் உள்ளது. ஸ்டேஷன் அருகில் இருந்தும்  மர்மநபர்கள் 2 வாகனங்களை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Tags : Thiruvattar, ,Ibag Mayam ,
× RELATED திருவட்டார் அருகே கல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல்