நெல்லை, ஏப். 14: அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சர்வதேச ஸ்பெல் பீ போட்டிகளில் 49 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர். மாணவர்களின் ஆங்கில மொழி ஆளுமை, உச்சரிப்பு, எழுத்தாக்கம், சொற்பொழிவு ஆகியவற்றை வலிமைப்படுத்தும் வகையில் ஸ்பெல் பீ போட்டித் தேர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுகள் 4கட்டங்களை கொண்டது. எஸ்எம்ஏ பள்ளி மாணவர்கள் 3கட்டங்களை வெற்றிகரமாக கடந்து 4வது சர்வதேச சுற்றில் பங்கேற்று 49 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.போட்டித் தேர்வுகளை மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி பெற எஸ்எம்ஏ பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்ற மாணவர்கள் ஆங்கில மொழித் திறமையோடு சர்வதேச போட்டித் தேர்வுகளில் பங்குபெறும் திறனை வளர்த்துக் கொள்கின்றனர்.
4வது சர்வதேச சுற்றில் பதக்கங்களை மாணவிகள் 3ம் வகுப்பு வர்ஷினி, 9ம் வகுப்பு ஜெய, 8ம் வகுப்பு மாணவர் ஜோஷ்வா கிருபாகரன் பெற்றனர். சிறந்த மேன்மை தகுதிக்கான பதக்கங்களை மாணவிகள் 6ம் வகுப்பு சுஜிதா, 5ம் வகுப்பு யோஹனா, அனுகிரஹா, ஜானவி, சமிதாராய், கோகிலா, அபர்ணா மற்றும் 6,7,8,9ம் வகுப்பு மாணவிகள் பெற்றனர். முதல் தகுதி பதக்கங்களை 3,4,5,6,7,9ம் வகுப்பு மாணவ, மாணவிகள் வென்றனர். பாராட்டு பதக்கங்களை 3ம் வகுப்பு மைசினியா சக்தி, 4ம் வகுப்பு ஆதித்யா, இந்தேஷ்வரா, 6ம் வகுப்பு தங்க பாலகிஷோர், ரக்ஷனாபதி, நித்திஷ், பொன்அகிலன், மகாஸ்வேதா, பிரீத்திகா, 8ம் வகுப்பு அம்பிரிஷ் ராஜா ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார். துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், அகாடமி டைரக்டர் ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் பாகீரதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.