×

குளத்தூர் அருகே சாலை விபத்தில் மூவர் காயம்

குளத்தூர், ஏப். 14: குளத்தூர் அருகே தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் மொபட் மீது பைக் மோதியதில் மூவர் காயமடைந்தனர்.  குளத்தூர் கக்கன்ஜி நகரை சேர்ந்த மாணிக்கம் மகன் தனசீலன் (44). இவர் தருவைகுளத்தில் உள்ள தனியார் உப்பளத்தில் வேலைசெய்து வருகிறார். நேற்று முன்தினம் தனது மொபட்டில் தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பால்கடைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வந்த தருவைகுளம் சுன்டன்பச்சேரி கிராமத்தை சேர்ந்த முத்தையா மகன் ஆனந்த் (18) என்பவர் ஓட்டிவந்த பைக் எதிர்பாராதவிதமாக தனசீலனின் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் தனசீலன், ஆனந்த் மற்றும் அவருடன் பின்னால் அமர்ந்திருந்த அஸ்வின்ராம் ஆகிய மூவரும் கீழே விழுந்து பலத்தகாயமடைந்தனர். இவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து தருவைகுளம் போலீசார் வழக்குர் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Kulathur ,
× RELATED குளத்தூர் வாக்குசாவடியில் சுயேட்சை வேட்பாளர் தர்ணா