×

கொரோனா விதிமீறிய 4 கடைகளுக்கு சீல்

ஈரோடு, ஏப்.14:  ஈரோட்டில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.20ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், வணிக நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றை கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து செயல்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு கலெக்டர் கதிரவன் நேற்று மாநகராட்சிக்கு உட்பட்ட வெட்டுக்காட்டு வலசு, வில்லரசம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வாகன பழுது நீக்கும் பட்டறைகள், எலக்ட்ரிக்கல் கடை, ஓட்டல் என 4 கடைகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காதது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து 4 கடைகளையும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும், 4 கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த ஆய்வின் போது ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் உடன் இருந்தார்.

Tags :
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...