×

ராஜபாளையத்தில் காப்பீடு அட்டை வழங்குவதாக கூறி மர்மநபர்கள் பணம் வசூல் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ராஜபாளையம், ஏப்.14: ராஜபாளையத்தில்  காப்பீடு அட்டை எடுத்து கொடுப்பதாக கூறி பணம் வசூல் செய்தவர்களிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், சின்னசுரைக்காய்பட்டி பகுதிக்கு நேற்று நகராட்சி அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறிக்கொண்டு 2 பெண்கள் உட்பட 3 பேர் வந்தனர். அப்பகுதியில் உள்ள பெண்களிடம்,  காப்பீட்டு திட்டத்திற்கு அட்டை பதிந்து கொடுப்பதாக கூறி ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பெற்றனர். மேலும்    தலா ரூ.80 வீதம் கொடுக்க வேண்டும் என்றனர். இதில் சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் விசாரணை செய்தபோது, இவர்கள்  காப்பீடு அட்டை பெற்று கொடுப்பதாக கூறி மோசடியாக பணம் வசூலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையறிந்த பெண்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!