×

பேரளம் அருகே முருகன் கோயில் தேர் திருவிழா ரத்து

திருவாரூர், ஏப்.14: திருவாரூர் அடுத்த பேரளம் அருகே கோயில் கந்தன்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி பிரமோற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த பிரமோற்சவத்தின் 10வது நாளான பவுர்ணமியன்று உச்சிக்கால மஹாபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். 9ம் நாளன்று திருத்தேர் விழா நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு தேர் திருவிழா நடைபெறவில்லை.

இந்நிலையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு பல்வேறு நெறிமுறைகளை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நிலையில் கோயில் கந்தன்குடி முருகன் கோயிலில் இந்தாண்டும் தேர் திருவிழா ரத்து செய்யப் பட்டுள்ளதாகவும், பிரமோற்சவத்தின் திருவிழா நிகழ்ச்சிகள் பக்தர்களின் அனுமதி யின்றி நடத்தப்படுவதோடு, சுவாமி கோயில் உள் பிரகாரத்தில் மட்டும் வலம் வரும் என அக்கோயிலின் நிர்வாக அதிகாரிகள் பிரபாகரன், முருகையன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags : Murugan ,chariot festival ,Peralam ,
× RELATED கண்டாச்சிபுரம் அருகே திரவுபதி அம்மன்...