×

பூதலூரில் மளிகை கடையில் ரூ.70 ஆயிரம் திருட்டு

திருக்காட்டுப்பள்ளி,ஏப் 14: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பெரியார்புரம் பெருமாள் மகன் உமாபதி(36). இவர் நால்ரோடு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் (12ம் தேதி) வியாபாரம் முடித்து கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று (13ம் தேதி) காலை கடையை திறந்து பார்த்தபோது கடையில் இருந்த பணப்பெட்டி திறந்து கிடந்தது.

கடையின் மேற்கூரையை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே இறங்கி ரூ. 70 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இது குறித்து பூதலூர் காவல் நிலையத்தில் உமாபதி புகார் செய்தார். புகாரை ஏற்று சப்இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் வழக்கு பதிந்து குற்றவாளியை தேடி வருகிறார்.

Tags : Puthalur ,
× RELATED பூதலூரில் முதியவர் பைக்கில் ரூ.1.50லட்சம் திருட்டு