திருமங்கலம், ஏப். 14: திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சிட்கோவில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், பலர் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள். தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவுவதால், மாவட்ட தொழில் மையம் மற்றும் கப்பலூர் சிட்கோ அதிபர்கள் சங்கம் சார்பில், சிட்கோவில் பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஆயிரம் பேருக்கு நேற்று தடுப்பூசி போடும் பணி நடந்தது. இது குறித்து கப்பலூர் தொழில் அதிபர் சங்கத்தலைவர் ரகுநாதராஜா கூறுகையில் கொரோனா இரண்டாம் அலை பரவ தொடங்கிய நிலையில், 45 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவித்தார்.