பொன்னமராவதி, ஏப்.14: பொன்னமராவதி அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நேற்று காலை பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பொன்னமராவதி பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று காலை பொன்னமராவதி, தொட்டியம்பட்டி, ஆலவயல், கண்டியாநத்தம், பகவாண்டிபட்டி வலையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் மின்னுடன் அதிகாலை மேகமூட்டத்துடன் திடீரென பெய்த மழையால் பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதி முழுவதும் இதமான வானிலை நிலவியது.
இருபுறமும் சாலைகளில் மழைநீர் ஓடியது. வாகனங்கள் சிலர் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றனர். அதிகாலை முதல் பெய்த மழை கோடை மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை பெய்த சிறிது நேரத்தில் மீண்டும் கடும் வெயில் வாட்டியதால் மழை பெய்ததே தெரியாத நிலை காணப்பட்டது.