×

தூக்கில் தொங்கினார் மனைவி கழுத்தை அறுத்து கொண்டு கணவர் தற்கொலை முயற்சி குடும்பத்தகராறில் மதுரையில் விபரீதம்

மதுரை, ஏப். 14: மதுரை ெஜய்ஹிந்துபுரம் சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (25). இவருடைய மனைவி உமாதேவி (19). மரவேலை பார்த்து வந்த, பாலகிருஷ்ணனுக்கு போதுமான வருமானம் இல்லை. ேமலும் தம்பதி இடையே வந்த சிறு, சிறு பிரச்னைக்கு எல்லாம் பெரும் தகராறாக மாறியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வெளியே படுத்துக்கொண்டார். மனைவி மட்டும் வீட்டினுள் படுத்திருந்தார். நேற்று அதிகாலை பாலகிருஷ்ணன் எழுந்து வீட்டிற்குள் சென்றபோது, மனைவி உமாதேவி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்து கதறி அழுத பாலகிருஷ்ணன், வீட்டிலிருந்து கத்தியை எடுத்து, தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டார். பின்னர், பழங்காநத்தத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் தொழிலாளி, ஒருவருக்கு போன் செய்து, மனைவி தற்கொலை செய்து கொண்டதையும், துக்கம் தாங்காமல் தான் கழுத்தை அறுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு பதறிப்ேபான, அந்த நபர், உடனடியாக சுந்தரராஜபுரம் சென்றுள்ளார். பாலகிருஷ்ணனின் வீட்டின் உள்பக்கம் தாழ் போட்டிருந்ததால், கதவை  திறக்கமுடிய வில்லை. இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடம் வந்த ஜெய்ஹிந்துபுரம் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே, உமாதேவி தூக்கில் தொங்கிய கயிறு அறுக்கப்பட்டு, தரையில் பிணமாக கிடந்துள்ளார். பாலகிருஷ்ணன் மனைவியின் உடலை கட்டிப்பிடித்தபடி கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக போலீசார், பாலகிருஷ்ணனை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உமாதேவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Madurai ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...