×

அறந்தாங்கி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

அறந்தாங்கி, ஏப்.14: அறந்தாங்கி அடுத்த பிடாரிகாடு கிராமத்தை சேர்ந்தவர் அன்பு தமிழன். இவரது மனைவி நிரஞ்சனா (22). இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நிரஞ்சனாவின் அத்தை கற்பகம் என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நிரஞ்சனா வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிரஞ்சனா தனது வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த நாகுடி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர். மேலும், நிரஞ்சனாவிற்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆனதால் வரதட்சனை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து புதுக்கோட்டை ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Aranthangi ,
× RELATED கடத்தப்பட்ட அரசு பஸ் விபத்தில் சிக்கியது