×

ஒட்டன்சத்திரத்தில் திமுகவினரை தாக்கிய இருவர் கைது

ஒட்டன்சத்திரம், ஏப். 14: ஒட்டன்சத்திரத்தில் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று, திமுகவினர் மீது அதிமுகவினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக திமுகவினர் ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்குப்பதிந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டு தப்பியோடிய அதிமுகவினர் 12 பேரை தேடி வந்தனர் . இந்நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (21), மணிகண்டன் (24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள 10 பேரை தேடி வருகின்றனர்.

Tags : DMK ,Ottanchattaram ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்