×

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக தேர்தல் களப்பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு

அரியலூர்,ஏப்.14: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் (பகுதியளவு) சட்டமன்ற தொகுதிகளில் எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் சிறப்பாக தேர்தல் களப்பணியாற்றிய காவல்துறையினருக்கும் காவல் துறையுடன் இணைந்து பொதுமக்கள் வாக்களிக்க சிறப்பாக பணிபுரிந்த தன்னார்வ என்எஸ்எஸ் மாணவர்களுக்கும் அரியலூர் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் பாராட்டு சான்றுகளை வழங்கி பாராட்டினார்.

கொரோனா காலத்தில் தேர்தல் பணியில் தன்னார்வலராக சிறப்பாக தேர்தல் பணியாற்றி 135க்கும் மேற்பட்ட என்என்எஸ் மாணவர்களுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டி, மாணவர்கள் அனைவரும் மக்கள் பொது சேவையில் மேலும் அக்கறையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஏடிஎஸ்பி, டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

Tags : Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...