×

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் செல்போன் திருடிய பெண் உள்பட 2 பேர் கைது

பெரம்பலூர், ஏப். 14: பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மங்களமேட்டை சேர்ந்த ராஜபூபதி என்பவரை பார்ப்பதற்காக, அவருடைய உறவினர் மங்களமேடு, இந்திரா நகரை சேர்ந்த கருணாநிதி மகன் மணிகண்டன் என்பவர் நேற்று முன்தினம் இரவு வந்தார். அப்போது, அவரது ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் காணாமல் போனது. இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் 2 பேர் செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை பிடித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் மருத்துவமனைக்குச் சென்று மேற்கொண்ட விசாரணையில், வேப்பந்தட்டை வட்டம், வெங்கனூரை சேர்ந்த கண்ணன் மகன் முரளி (20), சென்னை குன்றத்தூர், பழைய நல்லூரைச் சேர்ந்த சுரேஷ் மகள் நந்தினி (20) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து முரளி, நந்தினி ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Perambalur Government Hospital ,
× RELATED பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ரூ.25...