ஜெயங்கொண்டம், ஏப்.14: ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந் தோண்டி கிராமத்தில் திருச்சி-சிதம்பரம் சாலையில் நேற்று அதிகாலையில் சாலையில் நடந்து சென்ற பெயர் முகவரி தெரியாத மூதாட்டி ஒருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த மூதாட்டி பச்சைக் கலரில் கருப்பு கோடு பூபோட்ட சேலை உடுத்தி இருந்தார். சிவப்பு கலரில் ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். இவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.