×

திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹7.50 லட்சத்திற்கு எள், பருத்தி விற்பனை


திருச்செங்கோடு, ஏப்.14: திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹7.50 லட்சத்திற்கு எள், பருத்தி ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது. திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், வாராந்திர எள் விற்பனை ரகசிய டெண்டர் முறையில் நடந்தது. சின்னசேலம், ஆத்தூர், கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம, வீரகனூர் மற்றும் தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் எள் ரகங்களை கொண்டு வந்து குவித்தனர். 90 மூட்டை விற்பனைக்கு வந்தது. கொள்முதலுக்காக பவானி, அனுமன்பள்ளி, முத்தூர், காங்கேயம், திருப்பூர், திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். சிவப்பு ரகம் கிலோ ₹85.90 முதல் ₹107.50 வரையிலும், வெள்ளை ரகம் ₹83.10 முதல் ₹107.50 வரையிலும், கருப்பு ரகம் ₹81 முதல் ₹106.70 வரையிலும் ஏலம்போனது. ஆகமொத்தம் ₹5 லட்சத்திற்கு எள் விற்பனையானது. இதேபோல், 150 மூட்டை பருத்தியும் குவிக்கப்பட்டது. ₹2.50 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. பிடி ரகம் குவிண்டால் ₹5442 முதல் ₹7105 வரையிலும் விலை போனது.

Tags : Tiruchengode Co-operative Society ,
× RELATED திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹33 லட்சத்திற்கு எள், பருத்தி விற்பனை