×

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ஓசூர், ஏப்.14: ஓசூர் மாநகர பேருந்து நிலையம், கும்பார்பேட்டை, மத்திகிரி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில், அதிமுக சார்பில் நேற்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.  மாநகர செயலாளர் நாராயணன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், பழச்சாறு, தர்பூசணி உள்ளிட்டவைகளை வழங்கினார். பேரவை மாவட்ட செயலாளர் சிட்டிஜெகதீஷ், ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ராமு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...