×

வேதாரண்யம் பகுதியில் மாஸ்க் அவசியம் குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு

வேதாரண்யம். ஏப்.14: வேதாரண்யம் நகராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, பொறியாளர் பிரதான் பாபு, ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும் பணியாளர்கள் வடக்கு வீதி பேருந்து நிலையம் மேல வீதி ஆகிய இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது, முககவசம் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதம் விதித்தனர் கடைகள் வணிக வளாகங்கள் மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணியவும் நகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர். பல்வேறு இடங்களில் பிளீச்சிங் பவுடர் மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் வேதாரண்யம் பேருந்துகளில் முக கவசம் அணிந்து செல்வதை உறுதி செய்யும் வகையில் நகராட்சி பணியாளர்கள் பேருந்துகளில் ஏறி பரிசோதனை செய்தனர்.

Tags : Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்