×

செல்போன் கடையை உடைத்து கொள்ளை: சிறுவன் உள்பட இருவர் கைது

பூந்தமல்லி, ஏப். 14: செல்போன் கடையை உடைத்து ரூ.75 ஆயிரம், 18 செல்போன்களை கொள்ளையடித்த சிறுவன் உள்பட 2 பேரை, போலீசார் கைது செய்தனர். மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் பிரதான சாலையில் செல்போன் கடை நடத்தி வருபவர் அர்ஜுன் (26). நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் அர்ஜுன், கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்துபோது, கடை ஷட்டரின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.75 ஆயிரம், 18 புதிய விலை உயர்ந்த செல்போன்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

தகவலறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததனர். அதில் ைபக்கில் வந்த 2 பேர், கையில் கடப்பரையால் பூட்டை உடைப்பதும் அதற்குமுன் தொப்பி, மாஸ்க் அணிந்த ஒருவர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா இணைப்பை துண்டிப்பதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார், சென்னை கிண்டியை சேர்ந்த சஞ்சய் (19), சைதாப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறுவனை வளசரவாக்கத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், சஞ்சய் புழல் சிறையிலும் அடைத்தனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...