×

தென்காசியில் மேலும் 21 பேருக்கு கொரோனா

தென்காசி, ஏப். 13:  தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2ம் கட்ட பரவலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த இருதினங்களுக்கு முனனர் ஒரேநாளில் 41 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகினர். நேற்று முன்தினம் மட்டும் 53 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று  ஒரேநாளில் தொற்றால் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் தென்காசி மாவட்டத்தைப் பொருத்தவரை ஒட்டுமொத்தமாக வட்டார வாரியாக தென்காசியில் 18 பேருக்கும், சங்கரன்கோவிலில் 14  பேருக்கும், ஆலங்குளத்தில் 7 பேருக்கும், கடையம் வட்டாரத்தில் இருவருக்கும், கீழப்பாவூர் வட்டாரத்தில் 9 பேருக்கும், குருவிகுளம் வட்டாரத்தில் 5 பேருக்கும், கடையநல்லூர் வட்டாரத்தில் இருவருக்கும், செங்கோட்டை வட்டாரத்தில் 9 பேருக்கும், மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் மூவருக்கும், வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் 6 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,Tenkasi ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...