×

திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்

ஈரோடு, ஏப். 13: ஈரோட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த திமுக..,வினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஈரோடு மாநகர் மாவட்ட திமுக சார்பில், ஈரோடு சூளை பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரும், முக கவசமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினர். மாநகர அவை தலைவர் சேகரன், பெரியசேமூர் பகுதி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் கொடுத்தும், அவ்வழியாக வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளுக்கு முக கவசமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பெரியார் நகர் சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி, வைரம் பெரியசாமி, மனோகரன், முருகேஷ், செந்தில்குமார், சுப்பு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...