×

துறையூர் அருகே நூதனம் திருச்சி கலெக்டரிடம் அளித்தனர் திருவானைக்காவல் கல்லணை சாலை பனையபுரத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம்

திருவெறும்பூர்,ஏப். 13:திருவானைக்காவல் கல்லணை சாலையில் பனையபுரம் ஊராட்சியில் தெரு விளக்கு மின் கம்பி அறுந்து விழுந்து ஒரு மாதத்திற்கும் மேலாக கீழே கிடக்கிறது. விபத்து ஏற்படும் முன் இதனை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவானைக்காவலில் இருந்து கல்லணை செல்லும் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு திருவானைக்காவல் மின்வாரியத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் திருவானைக்காவல் அருகே உள்ள பனையபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் திருவானைக்காவல் கல்லணை மெயின் சாலையில் தெரு விளக்குகள் உள்ளது.

அந்த விளக்குகள் எரிவதற்கு மின்கம்பத்திற்கு செல்லும் மின் கம்பி அறுந்து விழுந்து ஒரு மாதமாகி விட்டது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது வரை இதனை கண்டுகொள்ளவில்லை. பகல் நேரத்தில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால் பிரச்னை இல்லை.

இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரிவதற்கு மின்சாரம் இயக்கப்படுவதால் இரவு நேரங்களில் திருவானைக்காவல் கல்லணை சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் விழுந்தால் உயிர் இழப்பு ஏற்படும். ஏற்கனவே அந்த பகுதி அடிக்கடி விபத்து நடக்கும் பகுதி. மேலும் இரவு நேரத்தில் அந்த பகுதியில் கால்நடைகள் நடமாடினால் பாதிப்பு ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பனையபுரம் பகுதியில் அறுந்து கிடக்கும் மின்கம்பியை உடனடியாக சீர் செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Trincomalee ,Thuraiyur ,
× RELATED நேற்றும் திருச்செந்தூரில் 23செ.மீ, காயல்பட்டினத்தில் 21செ.மீ. கனமழை பதிவு..!!