முத்துப்பேட்டை, ஏப்.13: முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் வில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி கூட்டம் நகர தலைவர் ஜெகபர்அலி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் வில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் சுந்தரராமன், ஹாஜா, வேல்முருகன், குலாம் ரசூல், ஹசன் மாலிக் உள்பட பலரும் கலந்துக்கொண்டனர்.