×

நூறு நாள் வேலை திட்டத்தை உடனே துவங்க வேண்டும்

தஞ்சை, ஏப்.13: தஞ்சை மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் உடனடியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயலர் சின்னத்துரை தலைமையில், மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, மாவட்ட தலைவர் வாசு, பொருளாளர் அபிமன்னன் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர் இந்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டத்தில், தற்போது விவசாய பணிகள் ஏதும் நடைபெறவில்லை. விவசாய தொழிலாளர்களுக்கு வேளாண் பணிகளும் இல்லாததால், கூலியும் இல்லை. மாவட்டத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை கிடைக்கவில்லை.

ஒவ்வொரு ஊராட்சியிலும் 10 முதல் 15 நபர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. ஒன்றிய அலுவலர்களிடம் கேட்கும் போது, எங்களுக்கு பணி வழங்கும் ஆணை வரவில்லை என கூறுகின்றனர். 2021ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் புதிய ஆண்டு என்பதாலும், விவசாயத்தில் வேலை இல்லை என்பதாலும், 100 நாள் வேலைக்கு வரும் அனைவருக்கும் வேலை வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...