×

இலுப்பூர் பேரூராட்சியில் கொரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு


இலுப்பூர், ஏப்.13: இலுப்பூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களிடம் முக கவசம் அணி வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். தமிழக அரசு கெரோனா வைரஸ் இரண்டாம் கட்ட பரவலை தடுப்பதற்கு பல்வேறு வழிகாட்டல் நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதையடுத்து இலுப்பூர் பேரூராட்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆசாராணி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதார துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களிடம் முககவசம் அணி வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

Tags : Iluppur ,
× RELATED மாதாந்திர பராமரிப்பு பணி எதிரொலி...