×

அன்னவாசல் அருகே பட்டுப்போன புளியமரத்தில் தீ வீரர்கள் போராடி அணைத்தனர்

இலுப்பூர், ஏப்.13: அன்னவாசல் அருகே பட்டுப்போன புளிய மரத்தில் ஏற்பட்ட தீயை இலுப்பூர் தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர்.
அன்னவாசல் அருகே கடம்பராயன் பட்டியில் கிழக்கு தெருவில் வசிப்பவர்கள் பங்குனி மாதத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதே போல் நேற்று முன்தினம் இரவு பங்குனி மாத பொங்கல் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பூஜைக்கு பிறகு எறிய விட்டிருந்த விளக்குகளை அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர்.

இரவு நேரத்தில் விளக்கு திரியினை எலிகள் இழுத்தால் விளக்கில் இருந்து தீ உருவாகி அருகில் இருந்த பட்டுப்போன புளிய மரத்தில் தீ பற்றி கொண்டது. இரவு முழுவதும் லேசாக பற்றிய தீ காலையில் மரம் முற்றிலும் பரவி மளமள வென பற்றி கொழுத்து விட்டு எரிய தொடங்கியது.

இதனால் பதட்டமடைந்த இப்பகுதி மக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ மற்ற இடத்திற்கு பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அணைத்தனர்.

Tags : Annavasal ,
× RELATED வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 8...