×

கூவத்தூர் கிராமத்தில் கள் விற்றவர் கைது

ஜெயங்கொண்டம்,ஏப்.13: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீசாருக்கு கூவத்தூர் கிராமத்தில் பனை மரத்திலிருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். கூவத்தூர் கிராமம் வில்லியம் என்பவரது வீட்டின் அருகில் சென்ற போது அங்கிருந்து இரண்டு பேர் தப்பி ஓட முயன்றனர். ஒருவரை மட்டும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்டவரிடம் விசாரித்தபோது அதே பகுதியை சேர்ந்த வில்லியம் ஜோசப் (45) எனவும் தப்பி ஓடியவர் டேவிட் எனவும் தெரிவித்தார். மேலும் விசாரணையில் அவரது வீட்டின் அருகில் உள்ள பனை மரத்தில் கள் இறக்கி விற்பனை செய்ததும் அங்கு விற்பனைக்காக மரத்திலிருந்து இறக்கி வைக்கப்பட்ட கள்ளில் போதைக்காக மயக்க மருந்துகள் கலந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. மேலும் கள்ளை கைப்பற்றி வில்லியம் ஜோசப்பை கைது செய்து தப்பியோடிய டேவிட்டை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Guwahati village ,
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா