×

நாகை மாவட்டத்தில் இதுவரை 10,301 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாகை, ஏப்.13: நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆயிரத்து 301 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று முன்தினம் (11 ம் தேதி) வரை 10 ஆயித்து 86 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று (12ம் தேதி) 128 பேர் பாதிக்கப்பட்டனர், அதே போல் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் நேற்று முன்தினம் வரை 90பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை, மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 9190 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 961 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 150 பேர் இறந்துள்ளனர். நேற்று மட்டும் 2 பேர் இறந்துள்ளனர். 897 பேர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 59 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags : Naga district ,
× RELATED நாகை மாவட்டத்தில் பண்ணை குட்டைகளில்...