×

மானாமதுரை ஜிஹெச்சில் கொரோனா பரிசோதனை மையம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

மானாமதுரை, ஏப்.13: மானாமதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் துவங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை தாலுகாவில் பெரியகோட்டை, முத்தனேந்தல் கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மானாமதுரை தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து முத்தனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்காக பலர் வந்து செல்கின்றனர். மானாமதுரை நகர் மையத்தில் அரசு மருத்துவமனை இருந்தாலும் மருத்துவத்துறை அறிவுரையின்படி முத்தனேந்தல் மையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மானாமதுரை நகரில் இருக்கும் பொதுமக்கள் முத்தனேந்தலுக்கு செல்ல வேண்டியுள்ளது.

மானாமதுரையில் இருந்து முத்தனேந்தலுக்கு கார், ஆட்டோ, பைக்குகளில் செல்ல அதிக கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் மானாமதுரை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ட்டி பிசிஆர் சோதனைகளை இங்கேயே செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர் சண்முகம் கூறுகையில், கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளவர்கள் மானாமதுரையில் இருந்து முத்தனேந்தல் கிராமத்திற்கு ஏராளமான நோயாளிகள் செல்கின்றனர். இதனால் பயணநேரமும், பொருள் செலவும், வாகனங்களின் எரிபொருள் என அனைத்தும் விரயமாகிறது. எனவே மானாமதுரை அரசு பொது மருத்துவமனை அல்லது தாய்சேய் நலவிடுதி இவற்றில் ஏதாவது ஒன்றில் தினமும் குறிப்பிட்ட பரிசோதனையை நேரத்தில் எடுக்கவேண்டும் என்றார்.

Tags : Corona Testing Center ,Manamadurai ,GH ,
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...