×

மானாமதுரை,காளையார்கோவிலில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு

மானாமதுரை, ஏப்.13: மானாமதுரை கிழக்கு ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை.ராஜாமணி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் முத்துசாமி முன்னிலை வகித்தார். சிவகங்கை ரோடு, ஊராட்சி ஒன்றிய அலுவலக ரோடு, சாஸ்தாநகர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு மோர், தண்ணீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர் சுப்பிரமணி, நகர திமுக ரவிச்சந்திரன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் மூர்த்தி, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் பாஸ்கரன், மானாமதுரை கிழக்கு ஒன்றிய பிரதிநிதி ஜெயமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காளையார்கோவில் பேருந்து நிலையம் அருகில் மாவட்டக் செயலாளர் பெரியகருப்பன் அறிவுறுத்தலின்படி நேற்று வெயிலை சமாளிக்கும் வகையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமையில் தண்ணீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் கிழக்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Kalaiyarkovil ,Manamadurai ,
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...