×

அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 3 டிப்பர் லாரிகள் ஜேசிபி பறிமுதல்

மேலூர், ஏப். 13: மேலூர் அருகே அனுமதியின்றி கண்மாயில் கிராவல் மண் அள்ளிய 3 டிப்பர் லாரிகள் மற்றும் ஒரு ஜேசிபி இயந்திரத்தை போலீசார் நேற்று பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். மேலூர் அருகே, கீழவளவு புறாக்கூட்டு மலை பின்புறம் உள்ள கண்மாயில் சிலர் கிராவல் மண் அள்ளுவதாக கீழவளவு எஸ்ஐ முருகராஜாவுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு தனிப்படை போலீசாருடன் அவர் சென்றபோது, அங்கு, 3 டிப்பர் லாரிகளில் ஒரு ஜேசிபி இயந்திரம் மூலம் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் மண் அள்ளியவர்கள் தப்பி ஓடினர். இதில், டிப்பர் லாரி டிரைவரான சின்னமலம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ் (25) பிடிபட்டார். வாகன உரியமையாளர் ராஜ்குமார் (40) உட்பட 4 பேர் தப்பியோடினர். இவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக கிராவல் மண் அள்ளிய 3 டிப்பர் லாரிகள், 1 ஜேசிபியை பறிமுதல் செய்த கீழவளவு போலீசார் வாகனங்களை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். நேற்று முன்தினம் இப்பகுதியில் மணல் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டு, டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : JCP ,
× RELATED விவசாயிகள் டெல்லிக்கு ஜே.சி.பி....