×

பழநி அருகே ஓய்வு ஹெச்எம் வீட்டில் திருட்டு

பழநி, ஏப். 13: பழநி அருகே நாகூர் பிரிவை சேர்ந்தவர் துரைச்சாமி (65). ஓய்வுபெற்ற பள்ளி தலைமையாசிரியர். இவரது மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைச்சாமி அமெரிக்காவில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டை உறவினரான செல்வராஜ் என்பவரை பார்த்து கொள்ளுமாறு கூறி சென்றுள்ளார். நேற்று செல்வராஜ் அவ்வழியே வந்தபோது துரைச்சாமியின் வீடு திறந்திருந்தது. உள்ளே சென்றபோது செல்வராஜை தாக்கி விட்டு 4 பேர் கொண்ட கும்பல் காரில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜ் சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வீட்டில் நகை, பணம் இருந்ததா என்று துரைச்சாமியிடம் விளக்கம் கேட்ட பிறகுதான் திருட்டு குறித்து விசாரணை நடத்தப்படுமென தெரிவித்தனர். மேலும் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காமிராக்களையும் ஆய்வு செய்து வருகி–்ன்றனர்.

Tags : Palani ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது