×

கொரோனா தடுப்பூசி திருவிழா

சேலம், ஏப்.13: கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், 45 வயதிற்கு மேற்பட்டஅனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிகவும் அவசியம். கோவிஷீல்டு, கோவேக்ஸின் என இருவகையான தடுப்பூசிகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில், இலவசமாக போடப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் ₹250 கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 45 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதின் மூலம் தங்களையும்,  குடும்பத்தையும், சமுதாயத்தையும் கொரோனா நோயிலிருந்துகாத்துக்கொள்ளலாம். நாளை (14ம்தேதி) வரை தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. எனவே 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

Tags : Corona Vaccine Festival ,
× RELATED புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி திருவிழா: ஆளுநர் தமிழிசை ஆய்வு