×

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வு வரும் 16ம் தேதி துவக்கம்


நாமக்கல், ஏப்.13: நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வு வருகிற 16ம் தேதி தொடங்குகிறது. நாமக்கல்லில் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், நேற்று நடைபெற்றது. இதில் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் விளக்கம் அளித்தார். தொடர்ந்து தேர்வு பணியில் ஈடுபடும் முதுகலை ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் 202 பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு செய்முறைத் தேர்வு 151 மையங்களில் நடத்தப்படுகிறது. வரும் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. தனியார் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளும் செய்முறை தேர்வுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குறிப்பிடப்பட்ட பள்ளிகளுக்கு சென்று, தேர்வுகளை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும். தேர்வுகளை நடத்தி கொடுக்க இயலாத நிலையில் உள்ள ஆசிரியர்களின் பட்டியல்களை, உடனடியாக தலைமை ஆசிரியர்கள் சிஇஓ அலுவலகத்துக்கு தெரியப்படுத்தவேண்டும். இவ்வாறு சிஇஓ அய்யண்ணன் தொவித்தார். கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன், தேர்வுத் துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, சந்திரசேகரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Namakkal ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை