×

வெப்படையில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

பள்ளிபாளையம், ஏப்.13: பள்ளிபாளையத்தில் கொக்கராயன்பேட்டை, வெப்படை ஆகிய இரண்டு இடங்களில், திமுக சார்பில் தண்ணீர் நேற்று பந்தல் திறக்கப்பட்டது. ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ் பங்கேற்று, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். கொளுத்தும்  கோடை வெயில் முடியும் வரை பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளில் கொக்கராயன்பேட்டை இளங்கோ, மாணவரணி ரமேஷ், இளைஞரணி ராதாகிருஷ்ணன், கார்த்திராஜ், ஷெரிப், பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Veppadi ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு