×

போச்சம்பள்ளியில் கோடை மழை

போச்சம்பள்ளி, ஏப்.13: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதை தவிர்த்து, வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். அதே போல், வாகன ஓட்டிகள் அதிகம் வராததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில், போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்ய துவங்கியது.
சுமார் அரைமணி நேரம் பெய்த மழையால், வெப்பம் தணிந்து இதமான காற்று வீசியது. அப்போது, இருமத்தூர் தனியார் பள்ளி அருகே வேடியப்பன் என்பவரது விவசாய நிலத்தில் இருந்த தென்னை மரத்தின் மீது இடி விழுந்தது. அதில், தென்னை மரம் தீ பிடித்து எரிந்தது.

Tags : Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...