×

நகர திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரி, ஏப்.13: கிருஷ்ணகிரி நகர திமுக சார்பில், நகரில் 5 ரோடு ரவுண்டானா அருகே,  அண்ணா சிலை, ராசுவீதி, பழையபேட்டை காந்தி சிலை, பழையபேட்டை ஆட்டோ ஸ்டேண்டு, லண்டன்பேட்டை அண்ணா சிலை, புதிய பேருந்து நிலையம், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள ஈத்கா மைதானம் ஆகிய 7 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளர் நவாப் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பரிதாநவாப், இலக்கிய அணி துணை அமைப்பாளர் அஸ்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்பி.சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பங்கேற்று, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி பழம், பப்பாளி பழம், திராட்சை உள்ளிட்டவைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், டேம்.வெங்கடேசன், நாகராஜ், ராஜேந்திரன், கோவிந்தன், கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் தர்மன், நாராயணமூர்த்தி, திருமலைச்செல்வன், மோதிலால், கோபிநாத், பிர்தோஸ்கான், கராமத், கனல்சுப்பிரமணி, சீனிவாசன், ஒசாமா, பரந்தாமன், தேன்மொழி மாதேஷ், தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி