×

சூளகிரி அருகே குடியிருப்பில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

சூளகிரி, ஏப்.13: சூளகிரி தாலுகா சென்னப்பள்ளி ஊராட்சி மேடுபள்ளி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் 5க்கும் மேற்பட்ட தெருக்களில் முறையாக சாக்கடை வசதி இல்லாததால், கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சந்திரப்பா கோயில் பின்புறம் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், சாக்கடை வசதியின்றி வீட்டின் அருகே தேங்கி உள்ளது. எனவே, உரிய சாக்கடை வசதி ஏற்படுத்தி, கழிவு நீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Choolagiri ,
× RELATED ஆவணங்களின்றி கொண்டு சென்ற ₹1.35 லட்சம் பறிமுதல்