×

திமுக சார்பில் மாஸ்க் வழங்கல்

போச்சம்பள்ளி, ஏப்.13: காவேரிப்பட்டணம் ஒன்றியம், பாலேகுளி கிராமத்தில், திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மாதவிமுருகேசன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர்கள் விமலாபெரியசாமி, சுப்பிரமணி, கவுன்சிலர் குமரவேல், துணை தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தனர். திமுக மகளிர் அணி தலைவர் ஆதிமகேந்திரன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, 100க்கும் மேற்பட்டோருக்கு நீர் மோர், தர்பூசணி, முகக்கவசம் வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...