×

தர்மபுரி அருகே மின்னல் தாக்கி மாடு பலி

தர்மபுரி, ஏப்.13: தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே இண்டமங்கலம் மேஸ்திரி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ரமேஷ். விவசாயியான இவர் மாடு வளர்த்து வருகிறார். நேற்று மாலை தென்னை தோப்பில் மேய்ச்சலுக்கு மாடுகளை விட்டிருந்தார். அப்போது பலத்த காற்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அப்போது திடீரென  மின்னல் தாக்கி ரமேஷின் மாடு பலியானது. சினை மாடு என்பதால் இதன் மதிப்பு ₹60ஆயிரம் இருக்கும் என தெரிவித்தனர். மின்னல் தாக்கி இறந்த தகவல் கிடைத்து வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

Tags : Dharmapuri ,
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...