×

கொரோனா புதிய உச்சம் ஒரே நாளில் 119 பேருக்கு தொற்று

ஈரோடு, ஏப். 12: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 119பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,940 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 37 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்காரணமாக, புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து 517 பேருக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இதுவரை மாவட்டத்தில் 150 பேர் பலியாகி உள்ளனர்.

Tags :
× RELATED வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது