×

மானாமதுரையில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

மானாமதுரை, ஏப்.12: மானாமதுரையில் திமுக சார்பில் பொதுமக்களின் தாகத்தை தீர்ப்பதற்கு தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்களுக்கு தண்ணீர், மோர் ஆகியவற்றை வழங்கவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மானாமதுரை திமுக சார்பில் பேரூராட்சி அலுவலகம் அருகே தண்ணீர்பந்தல் நேற்று அமைக்கப்பட்டது, மானாமதுரை நகர் செயலாளர் பொன்னுச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, மாவட்ட பிரதிநிதி காளியப்பன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லதா, நகர் துணைச்செயலாளர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தண்ணீர், நீர்மோர் உள்ளிட்டவைகளை வழங்கினர்.

Tags : DMK ,Manamadurai ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி