×

ராமநாதபுரத்தில் போக்குவரத்து விதி மீறிய 533 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம், ஏப்.12: ராமநாதபுரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 533 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து அபராதம் வசூலித்தனர். ராமநாதபுரம் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியோர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்தனர். அதிவேகத்தில் சென்றதாக 5 பேர், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 19 பேர், தலைக்கவசம் அணியாமல் சென்ற 277 பேர், தலைக்கவசம் அணியாமல் டூவீலர் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த 59 பேர், சீட் பெல்ட் அணியாமல் சென்ற ஒருவர், இதர பிரிவுகளின் கீழ் 172 பேர் என 533 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து 67ஆயிரத்து 500 ரூபாயை போலீசார் அபராதமாக வசூலித்தனர்.

Tags : Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...